Tuesday, October 12, 2010

மனிதா ...!

 

மனிதா...
பாவம் செய்கிறாய் ..!
செய்த பாவத்திற்கு பரிகாரம்
உண்டியலா..?
செய்யப்போகும் பாவத்திற்கு பரிகாரம்
உண்டியலா ...?

உண்டியலில் பணம் போட்டால்

பாவம் தீருமா...?
சபித்தவர்களின்
சாபம்தான் மாறுமா...?

நீ ...போட்ட பணத்தால்

எத்தனை: சுவாமி"கள்
சுவீஸ் கணக்கு வைத்திருக்கிறது
உனக்குத் தெரியுமா...?

ஓசோன் படலத்தில்

ஓட்டை ....!
உண்டியல் போட்டாலும்
உயிர் வாழ முடியாது ...!
"மதத்தை அழிப்போம்
மரம் வளர்ப்போம் "
கோஷம் போடு ...!
குலமும் வாழும் ...
குலதெய்வமும் வாழும் ...!

பணத்தை ...

கோவிலில் போடாதே ...
கோவில் கட்டாதே ...!
மோதல்கள் போதும் ..!

குளம் வெட்டு ...

கும்பிடுகிறோம்...!
படிக்க பள்ளி கட்டு ...
பகுத்தறிவைக் கொடு ...
பாதம் தொடுகிறோம் ...!
நம்ம்பிக்கையை விதைத்து
தன்னம்ம்பிக்கை கொடு ...!
நாளைய சமுதையாமாவது
நலம் பெறட்டும் ...!

No comments:

Post a Comment