மனிதநேயம் மலர
பனி பொழியும் காலைப் பொழுது
விடியல் பறவைகளின் உற்சாக ஒலி அலைகள்!
தொடுவானத்தில் கதிரவனின்
வருகைக்கான மேகப் பெண்களின் அணிவகுப்பு !
புத்தம் புதிய புத்தகத்தை
புரட்டிப்பார்க்கும் பள்ளி மாணவன் போல்,
எனக்குள் பிரவாகமெடுக்கும்
ஒரு புதிய வாழ்க்கையின் அருவி நீரூற்று!
இன்றைய பொழுதில் எதையாவது
சாதிக்க வேண்டும் என்கிற உத்வேகம்!
எல்லா விடியல்களும் எனக்காகவே
என்று எண்ணுகின்ற என் மனம் மட்டும்
ஓயாமல் சொல்லிக்கொண்டே இருக்கிறது...
நேற்றைய பொழுது மறைந்தாலும்
நாளைய பொழுதின் மேன்மைக்கு
இன்றைய பொழுதில்................
மனிதநேயம் மலர, மானுடம் தழைக்க
உனது கதவுகளை திறந்து வை!
ஆம் காற்று உள்ளே பிரவேசிக்க அல்ல....
நமது உதவிக் கரங்கள் மற்றவர்களுக்காக
வெளியே செல்ல.....!
No comments:
Post a Comment