Friday, November 19, 2010
Monday, November 15, 2010
சொந்தங்களுடன்தானே கொண்டாடினீர்கள்!!!???
சிந்திய சோற்றுப் பருக்கைகளை
கொத்தும் புறாக்கள் வீட்டின் முன்
வருவதே இல்லை!
இலையுதிர் காலங்கள்
என்பது செய்தியாய்
கேட்டால்தான் தெரிகிறது!
மாலையை நினைவுப் படுத்தும்
மல்லிகை எல்லாம்
மாற்றான் தோட்டத்திலும் இல்லை!
அந்த ஜன்னல் ஓர
சாரல்களை எல்லாம்
கண்ணாடி போட்டு மூடிவிட்டனர்!
இப்பொழுதெல்லாம் செல்லப் பிராணிகள்
பிளாஸ்டிக் பொம்மைகள்
என்றாகிவிட்டது!
மரத்தடி சாமிகள் கூட
சாலையின் ஓரமாய்
நகர்ந்துவிட்டனர்!
குழந்தைகள் எல்லாம்
திடலுக்கு பதில்
வீடியோ கேமில் அமர்ந்துவிட்டனர்!
விறகு அடுப்பு ஊதியவர்கள் கூட
பஞ்சு வைத்து புகைக்க
ஆரம்பித்து விட்டனர்!
கொக்குகளும் நாரைகளும்
வட்டமிட ஆழ்குழாய்
கிணறுகளையாவது தேடுகின்றன!
அரிசி கோலங்கள்
சுண்ணாம்பாகி சாயப் பூச்சாகி
கட்டெறும்புகளாகிவிட்டன!
என்ன செய்வது
இந்த தின மழையில்
முளைக்கும் அபூர்வ காளான்களை!
இதைத்தானே செய்தீர்கள்???
இந்த தீபாவளியையாவது விட்டுப்போன
சொந்தங்களுடன்தானே கொண்டாடினீர்கள்!!!???
Friday, November 12, 2010
முதல் மடல்..
முத்தான என் பிள்ளை
முத்தமிட்டு அனுப்பியிருக்கும்
முதல் மடல்!
கெஞ்சிக் கூத்தாடும்
அவன் பிஞ்சி விரல்கள்;
கொஞ்சி விளையாடியக்
காகிதத்தைத்
தொட்டுப் பார்ப்பேன்;
கோலம் இட்டதைக்;
கண்டு ரசிப்பேன்!
அடித்தல் திருத்தலுடன்;
ஆங்காங்கேப் பிழைகள்;
அவன் அழித்து
எழுத முற்பட்டதெல்லாம்
அப்பட்டமாய் அப்படியே
என்னைப் போல!
பெருமைப் பொங்க;
உதடுகள் பிரிய;
ஓடிக் காட்டுவேன்;
நண்பர்களிடம்!
தனித்திருந்து நான்
வெளிநாட்டில்
சிந்திய வியர்வை;
பலனளிக்கிறது;
மடலில் பிரதிப்பலிக்கிறது!
அவன் கிறுக்கல்களை
இல்லை இல்லை
கவிதைகளைப்
படிக்க முடியவில்லை;
என்றாலும்
Tuesday, November 9, 2010
என் கல்லூரி இருக்கையே!!!
அனுமதி பெறாமல் உன்மேல்
நான் அமரும்பொழுது என்னை
முதுகோடு சேர்த்து அனைத்துக் கொண்டாயே!
கொஞ்சம் கொஞ்சமாய்
எனக்கு பழகக் கற்றுத் தந்தாய்
பழகினேன், நண்பர்கள் என்றார்கள்!
கோபம் வரும் பொழுது
எனக்கு சிரிக்க கற்றுத் தந்தாய்
சிரிக்க வைத்தேன், ரசிகன் என்றார்கள்!
அவள் கண்களை காட்டி காட்டி
எனக்கு காதலிக்க கற்றுத் தந்தாய்
காதலித்தேன், கவி என்றார்கள்!
நானும் நண்பனும் நட்பு என்று
உறவாடி மகிழ்கையில் நீ
அண்டை இருக்கையுடன் தோள் சேர்த்து
வெற்றியில் தட்டிக்கொண்டாய்!
தலைவலியில் உன் மேல்
தலை சாய்க்கும் பொழுதெல்லாம்
என் தலைக் கோதி என்னை ஏற்றுக்கொண்டாய்!
முதல் மாணவனாய் மதிப்பெண்களை
சொன்ன பொழுது ஆனந்தமாயும்
தோல்வியில் சோகமாயும்
என் கண்ணீரை வாங்கி கொண்டாய்!
கோபத்தில் எத்தனை முறை
பேனா முனையால் உன்னை காயப்படுத்திருகிறேன் !
ஆத்திரத்தில் எத்தனை முறை
கீழே தள்ளி இருக்கிறேன்!
எத்தனை முறை எட்டி உதைதிருக்கிறேன்!
அத்தனையும் தாங்கிக் கொண்டு
இந்த நான்கு ஆண்டுகளையும்
என்னையும் தாங்கிக் கொண்ட உன்னை
இங்கேயே விட்டு செல்கிறேன்.
நான் உன்மேல் பழகிய கையெழுத்துகள்
மட்டும் போதும் என்று புதியவனை
ஏற்றுக் கொள்ளுமுன் ஒரு நிமிடம்
என் வேண்டுதலை கேள்,
ஆண்டுகள் கடந்து என் வெற்றிகள்
முழுவதும் உன் காலடியில் சமர்பிக்க
வரும்பொழுது மீண்டும் உன் கரம் விரித்து
அமர ஒரு இடம் தருவாயா நான்
அமர்ந்து எழுந்த என் கல்லூரி இருக்கையே!!!
கையேந்தி பவன்
அழுகி போன தக்காளி
அலசாத வெங்காயம்
சொத்தையான காய்கறி
சோற்றுக்கு மலிவான அரிசி
வடிகட்டாத உப்பு நீர்
வறுவலுக்கு பனங் கொட்டை எண்ணெய்
கள்ளச்சந்தை எரிவாயு
கழுவாத எச்சில் பாத்திரம்
ஈக்களுக்கு இன்பபுரி
இருட்டுக்கு இன்னொரு பூரி
பூச்சி மைதா ரொட்டிக்கு
புகை படிந்த தோசை கல்லில்
பருப்பில்லா சாம்பார்
பலவகையாய் கூட்டியே
புளித்துப்போன தயிரோடு
புளிக்காத ஊறுகாய்
வியர்வை சொட்டும் உழைப்பாளிக்கு
விளங்காத சுகாதாரம்
எட்டு ரூபாய் சாப்பாட்டில்
இதை விட வேறில்லை
மூட்டை தொக்கும் கணேசன்
மூன்று ரூபாய் பாக்கிக்கு
மதிய சாப்பாட்டை மறந்துதான்
மாடாய் உழைக்கிறான் நொந்துதான்
உயர்தர சைவ உணவில்
உழைக்கும் வர்க்கம் மலிவு விலையில்
கனவைத்தான் கண்டுவைக்க
காசில்லாமல் உண்டு வைக்க
ஒரு ஈ குளிரூட்டிய அறையில்
உட்கார்ந்து தின்கிறதாம்
ஏழைகளை பார்த்துதான்
இந்த கவிதையை படிக்கிறதாம்
எங்களைவிட மனிதனெல்லாம்
இலவசமாய் உண்பதில்லை
தப்பித்தவறி அடித்தால் கூட
தடுமாறும் மரணம் கூட
ஊழல் போன உளுத்தர்களின்
உயரும் கையை கண்டுதான்
பறந்து நான் செல்கின்றேன் - அவர்
பார்க்கும்போது வாயில் நுழைந்து
இன்னொரு ஏப்பம் விடுகின்றேன்
எமன் வந்தால் மட்டும் இறக்கின்றேன்
மோட்சத்தின் என் சாவை
முழித்திருந்து கண்டிடுங்கள்
கையேந்தி பவன் அருகில் எனக்கு
கல்லறையை கட்டிடுங்கள்
Tuesday, November 2, 2010
மாதச் சம்பளம்
உழைப்பிற்கு ஊதியமாய்
களைப்பிற்கு உற்சாகமாய்
மாதச்சம்பளம்;
வாங்கியதும் வீங்கிய
கடமைக்குத் தீனியாய்!
கட்டிப்பிடித்து ஒட்டிப் பார்த்தாலும்
ஒட்டாமல் ஒடும்
ஒட்டப்பந்தய சூரனாக!
மலறும் முகம்
மணிக்கணக்கிற்குத்
தாங்காது;
”மணி”யும் என்
கணக்கிற்கேப் போகாது!
கர்ணம் போட்டு வண்ண
வண்ணமாய் கனவுகள்
கண்டாலும்;
தங்காது தங்கம்
விற்கும் விலைக்கு!
எப்போதாவது ஏறும் சம்பளம்;
ஒட்டிபிறந்த உடன்பிறப்பாய்
கூடவே என் தேவைகளும்!
ஆறுதலாய் பணம் அனுப்பிய
ரசீது மட்டும் என் கையில்!
Subscribe to:
Posts (Atom)