Monday, October 11, 2010

வெற்றி படிக்கட்டு ...!







வாழ்க்கை கடலில்
நீந்துகின்றேன் ....,
எனக்கு முன்னால்
யாருமில்லை ...!,
திரும்பி பார்த்தேன் ...
பின்னால் பலர்...!

முன்னாடி சென்றவர்கள்

முன்னேறி இருக்கலாம் ...
மூழ்கியும் இருக்கலாம் ...!
பின்னாடி வருபவர்களுக்கு
நான் முன்னாடிதான் ...!

முன்னாடி சென்றவர்கள்

எனக்கு உந்துதல்,
பின்னாடி வருபவர்கள்
எனக்கு ஆறுதல்...!

கோட்டான்களும் ,

புல்லுருவிகளும்
வாழும் இவ்வுலகில்,
படித்த பள்ளிப்பாடம்
தோற்றுத்தான் போய்விட்டது...!
அனுபவ வாழ்க்கையே
படிப்பாகிப்போனது...!
விடை தெரியா வினாவுக்கு
தேடலே ............
வாழ்க்கையாய்ப் போனது .

விடை தெரிந்தவர்களுக்கு

குழப்பம் கும்மியடித்தது ...!
சரியா... தவறாயென
கணிக்கும் முன்னே ,
காலம் கடந்து விடுகிறது ..
வாழ்வு முடிந்து விடுகிறது ...!

இளைஞனே ,

அனுபவங்களே ..வாழ்க்கை !
அனுபவங்களே படிப்பு ,
தேடு ..தேடு
தேடிக்கொண்டே இரு ...
தேடல்தான் வாழ்க்கை ..!
வெற்றி ..தோல்வி ..
எங்கும் ..எதிலும் உண்டு ,
தோல்வியை ,
ஈவு இரக்கமின்றி
கொன்று விடு ,.!
அதுதான்
வெற்றியின் 'முதற்படிக்கட்டு '

No comments:

Post a Comment