Monday, October 4, 2010

வறுமை சிறுவன்....





ஒரு புழுதி காட்டோடு
ஓடி விளையாடிய நட்பு..

உச்ச்ந்தலையில் விடியலை தூக்கி

உழவுக்கு விழித்தெழுந்த ஜீவன்...

காம்ப்ளான், கெல்லாக்ஸ் நிரப்பாதது,

கஞ்சி குடித்தே விறைப்பேறிய உடம்பு....

மதிய உணவோடு சேர்த்து

மனதையும் கொள்ளையடித்த அரசு பள்ளி....

காசு கொடுத்து கற்க முடியாதது,

கால் அரை வீசை என்று,
காய்கறி விற்றதில் தெரிந்தது கணக்கு...

இப்படியே பழகிப்போனது மனது..

நீர், நிலம், காற்று, வானம், நெருப்பு, பறப்பன, ஊர்வன,
நடப்பன, மிதப்பன...
இப்படியே
வாழ்க்கையின் ஒவ்வொரு வரிகளாக,
வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்..

இருப்பவர்கள்,

வாழ்க்கையின் பக்கங்களை
விலை கொடுத்து வாங்கியும்,
கற்றுக்கொண்டே.....
இன்னமும் கற்றுகொண்டே....

1 comment:

  1. வாழ்க்கையின் ஒவ்வொரு வரிகளாக,
    வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்..
    great feel......

    ReplyDelete