Tuesday, September 28, 2010

அன்பு மட்டும் கற்று கொடுத்த கடவுள் !!!!

 

 

தாயே !!!
உன் அன்பை பெற்ற நான் உரைக்கின்ற
உண்மை மொழிகளிது .......
உன் அன்பை,,,
கூற வார்த்தை இல்லை என்றாலும் .....

எனக்கு தெரிந்த வார்த்தைகளையே , மீண்டும் ,

உன் பாதத்திற்கு சமர்பிக்கிறேன் ......

உலகில் வாழும் அனைவருக்கும் ,,

உறவுகள் உயிரை இருப்பதில்லை !..

ஆனால் ,

உயிரையே கொடுத்து அந்த உயிருக்காக
வாழும் உன்னத படைப்பு நீ !!!

நீ மட்டும் தான் ..........


சொந்தங்கள் பல தோன்றிடும்

இனிமையாய் சில நேரங்களில் பேசிடும் ....!

ஆனால் ... !

உண்மையிலேயே!!!!!!!
நான் பெருமையை சொல்லிகொள்ளும் ,
எனக்கு சொந்நதமான உறவு நீ மட்டும்!!!!!

என் நினைவுகள் .......

அனைத்தும் உன்னை நோக்கியே இருக்கும் ......

கடவுளின் வடிவமல்ல தாய் .......

கடவுளால் அனுப்பப்பட்ட அவள் .....

படைப்பில் பிரம்மா!!!

அன்பில் பார்வதி !!!
அறிவில் சரஸ்வதி !!
அழகில் மகாலட்சுமி !!!

என் தாயே !!!


உன்னை போற்றிட எனது இரு

கனங்கள் போதாது,
உன் அன்பால் கலந்து எனக்கு நீ ஊட்டிய உணவு ..

உன் கருணையால் உருவான ,

உன் உடலால் எனக்கு நீ போர்த்திய போர்வை !!!!

என்னை காக்க வேண்டும் என்ற காரணத்தால் .....


பூமா தேவியே பொறுமை இழக்க ,,,

பொறுமையாய் நடந்த உன் கால்கள் ......

இவை அனைத்தும் .....

அப்போதே எனக்கு புரிந்திருந்தால் ,,,,,

இந்த இருட்டான உலகில் வந்து பிறந்திருப்பேனா !!!


என் உலகமே நீதான் என்று ,

தெரியாத நிலையில் தான், இவ்வுலகை
காண பிறந்துவிட்டேன் ....
அவசர அவசரமாய் !!!

வரம் கொடுக்க கடவுள் வந்தால் கூட .......

எனக்கு கிடைத்த பெரிய வரம் ...
நீ இருக்கும் போது, வேறென்ன,
கேட்டு விடப் போகிறேன் ...

உன்னை விட பெரிய வரம் இல்லை என மகிழ்கிறேன் ....


உன் அன்பின் பயணம் முடியாத போது என் வார்த்தையின் அளவும் குறையாது !!!


என்றென்றும் எனக்காக வாழும் உன் எண்ணங்களுக்கு ......

செயல்களுக்கு ....
உணர்வுகளுக்கு ... கடமைகளுக்கு ...

நன்றி !!!! நன்றி !!!!! நன்றி !!!!!!

Friday, September 24, 2010

தாகத்தைத் தணிக்க..



நெடுந்தூரப் பயணம்
தாகத்தைத் தணிக்க
தாகத்துடன் தினமும்
ஏக்கத்துடன்!

வறண்டுப்போன பூமியால்
மிரண்டுப்போன வாழ்க்கை
இறுண்டுப்போன நாங்கள்!

சேர்க்க வேண்டியக் காலத்தில்
சேர்க்காமல் இருந்ததால்
சேற்றைப்பார்க்க முடியாமல்!

படைகளைக் கொண்டு
எதிரிகள் உண்டு
எதிர்காலத்தில்;
எண்ணையைப் போல
நீருக்கும்!

நீரும் இருக்காது
நீயும் இல்லாது!
முழுதாய் காய்ந்திடும்
முன்னே சேர்த்திடு
நீரைக் காத்திடு!

Wednesday, September 22, 2010

கரிசக்காடு....

வானம் பார்த்து காத்துக்கொண்டிருப்பது
வயற்காடு மட்டுமல்ல, அவர்களின் வாழ்க்கையும் தான்...

வெட்ட வெளிச்சத்தில்

வெயிலின் மடியில் - அவர்களின் தினப் பொழுதுகள்..

நிதர்சனமான உறக்கம்

நிலவின் அரவணைப்பில்- அவர்களின் நடுநிசிகள்..

மழை ஏதுமில்லாத தேசத்தில்,

உழைப்பை மட்டுமே விதைகளாக்கியவர்கள்...

போட்டு எடுக்கமுடியாத நிலையில் முதலீடு

நட்டும், முளைக்காத விதைகளை போல...

ஒதுக்குப்புற மூங்கில் காடுகளை,

ஒருவழியாக வெட்டிச்சாய்த்து,
படிக்கட்டு முதல் பந்தல் வரை
பல்லாயிரம் பேர்களுக்கு மேடை போட்டு
மாண்புமிகுக்களின் முன்னிலையில் நடக்கிறது
"மழை வேண்டி யாகம்".

வேண்டா வெறுப்போடு சிரிக்கிறான்,

"கண்கெட்ட பிறகு ......... எதற்கு ? "

போட்டு எடுக்கமுடியாத நிலையில் முதலீடு

நட்டும், முளைக்காத விதைகளை போல...

வனம் வேண்டாம்..

ஒரே ஒரு மரம் போதும் வீட்டிற்க்கு,
ஒரு சரித்திரம் காய்ந்து கொண்டிருக்கிறது...

உறவும் பிரிவும்



ஒட்டி வந்த உறவுகளை
வெட்டி வந்திருக்கிறோம்
கடமைகளைக் கட்டி
வந்திருக்கிறோம்!

கைக்கோர்த்துக்
கதைப்பேச வேண்டிய
மனைவியை விட்டு
வந்திருக்கிறோம்;
சோகங்களை நட்டு
வந்திருக்கிறோம்!

கந்தையானாலும்
கசக்கி கட்டு பழமொழி உண்டு ;
கசங்கிய சட்டையை நாங்கள்
அணிந்தோம் குடும்பம்
கசங்காமல் இருக்க!

கடல் தேடி வந்திருக்கிறோம்
திரவியத்திற்க்காக;
கனவுகளைத் தொலைத்தோம்
திர்ஹம்சுக்காக!

உள்ளூரில் விலைப்போவாததால்
வளைக்குடாவில் நாங்கள்;
அடிமாட்டு விலைக்கு சிலர்!

ஆளுக்கு ஆறடி
படுப்பதற்கு மட்டும் இங்கே;
ஒற்றை குளியலறைக்கு
எல்லோரும்;
அடுத்த முறை உரிமையாளன்
அலாரமாய் அடிப்பான்
 கதவோடு!

உள்நாட்டு மோகம்
வெளிநாடோ சோகம்
பணம் சேர்த்தாலும் தீராத தாகம்!

இருக்கிறதை விட்டு விட்டு
பறப்பதற்கு ஆசை;
பறந்தப் பின்னும்
பருந்தாய் பணத்திற்கு!

Sunday, September 19, 2010

அனாதைக் குழந்தையின் பிறந்த நாள் பரிசுகள்

 

 

உயிரை வதைக்கும்
தனிமை கண்டு
கண்கலங்குவதேனோ
என்
செல்லப் பெண்ணே?

இந்த உலகம்தானடி

தனிமையில் தவிக்கிறது
உன் உறவின்றி...

உன்னில் -உனக்காக

வாழும் உன் மனம் நான்
நானும் கூட ஒரு
தோழிதான் உனக்கு!

என் கண்மணியே

கண்கலங்காதே!
உனக்காக ஆயிரம்
சொந்தங்கள்
உள்ளதடி
இந்த பூமியில்...

காலையில் உன்

பூ முகம் காண
ஓடி வரும் சூரியன்
உன் தந்தை!

இரவில் உன்னைத்

தாலாட்டி தூங்க வைக்கும்
வெண்ணிலவு
உன் தாய்!

தினமும் உன்

மூச்சுக் காற்றுடன்
கலந்து விளையாடும்
பூங்காற்று - உன்
சகோதரன்!

உன்னைப் பார்த்ததும்

மனம் உருகி
ஓடி வந்து
அணைத்துக் கொள்ளும்
வான் மழை
உன் தோழி!

என்னைவிட அழகா நீ?

என்று எப்போதும்
பொறாமைப் படும்
மலர்கள் உன்
சகோதரிகள்!

இத்தனை இருந்தும்

ஏன் நீ இன்னும்
கண்கலங்குகிறாய்?

இவை அனைத்தும்

கடவுள் உனக்காக -
நீ
பிறந்த அந்த நாள்முதலே
கொடுத்த பரிசுப்
பொருட்கள் கண்ணே!

Friday, September 17, 2010

சுவிஸ் வங்கி

 

சுரண்டிய சொத்தெல்லாம்
சுவிஸ் வங்கியில நாம்
சுதந்திரமாய் இருக்கிறோமோ
ஒண்ணுமே புரியல

பாடுபட்ட மக்களெல்லாம்

பஞ்சத்திலே இருக்குது - அது
பழக்கமாக இலவசத்தில்
கொஞ்சமாய் சிரிக்குது

ஏர் பிடிச்ச காணியெல்லாம்

இயந்திரம்தான் நோறுக்குது - இப்போ
இருட்டில் நின் ற இலஞ்சம் கூட
எமனாய்தான் பிடிக்குது

குறுக்கு புத்தி கட்சியெல்லாம்

கொடியுந்தான் பிடிக்குது - அது
கும்ம்பிட்டுதான் காசு கொடுத்து
கொடுஞ் ஆட்சி செய்ய நினைக்குது

பதினெட்டு வயசினிலே

பலருக்கு பைத்தியம்தான் பிடிக்குது
பாராட்டும் நீதித்துறையோ
பார்த்து தேர்தலிலே குதிக்குது


விலைவாசி ஏற்றதிலே

விண்ணும் கூட குனியுது
வியர்வை சிந்தும் மக்களெல்லாம்
விதி வங்க கடலில் மிதக்குது

நாடாளும் தலைவன் முன்னால்

நாலு வயதில் பிச்சைதான் - இப்போ
போராடும் சில கூட்டத்துக்கு இவர்
போடுவதும் பச்சை சட்டம் தான்

தாரள மயமாக்கதிலே

தனியாரு வழிபோக்கதிலே
யூகத்திலே ஒரு விலை பேசி
உருவாகும் அணு உலையிலே பல உயிர் வீசி

போபால் விஷ தாக்கத்திலே

புரைபோன ஒரு வேகத்திலே
புது சட்டம் செய்வார்
புரியா திட்டம் செய்வார்

அமெரிக்காவில் அணு விபதென்றால்

ஆயுள் காப்பீடு பத்தாயிரம் கோடியாகும்
அடிமையான நம் நாட்டினிலே நாம்
பிழைத்திருந்தால்
ஆயிரத்தி ஐநூறு கோடியாகும்

என்றே விதி செய்வார்

வினை பல செய்வார் அவர்
வீடெல்லாம் பல நாடாகும் - நாம்
விழிதெழுந்தால் அது தூளாகும்

நரசிங்க கவி நான் சொல்வேன்

நண்பா நாம் விழித்தெழுந்தால்
பலம் மீட்டிடலாம் ஓட்டு வாள் கொண்டு
பார் புகழ் காட்டிடலாம்.

Thursday, September 16, 2010

ஆண் தாலாட்டு




ஆராரோ கண்ணே ஆரரரோ கண்ணேஆராரோ
ஆறறிவே கண்ணே என் ஆறறிவே

தென்றல் தீர்ந்துவிடும்

திங்கள் மறைந்துவிடும் என்றா அழுகிறாய்

கடல் கொண்டுவிடும்

இமயம் தின்றுவிடும் என்றா அழுகிறாய்

ஓசோன் பல ஓட்டை விழும்

உலகம் அழிந்துவிடும் என்றா அழுகிறாய்

ஆராரோ கண்ணே ஆரரரோ கண்ணேஆராரோ

ஆறறிவே கண்ணே என் ஆறறிவே

காடு குறைந்துவிடும்

காற்றும் நின்றுவிடும் என்றா அழுகிறாய்

மாசு சூழ்ந்துவிடும்

மக்கள் என்ன செய்வார் என்றா அழுகிறாய்

சூரியன் சுட்டுவிடும் மனித

சுதந்திரம் கெட்டுவிடும் என்றா அழுகிறாய்

ஆராரோ கண்ணே ஆரரரோ கண்ணேஆராரோ

ஆறறிவே கண்ணே என் ஆறறிவே

விஞ்ஞானம் தொட்டுவிடும்

வியாபாரத்தில் செயற்கை உலகம் கட்டிவிடும் என்றா அழுகிறாய்

பல நோய் தாக்கும்

பணபேய் தலைதூக்கும் என்றா அழுகிறாய்

சாக்கடை நீராகும் அதற்கு

சமுத்திரம் பேராகும் என்றா அழுகிறாய்

ஆராரோ கண்ணே ஆரரரோ கண்ணேஆராரோ

ஆறறிவே கண்ணே என் ஆறறிவே

நீரில்லை வருங்காலத்திலே வாழ

நிலத்தில் மக்களில்லை என்றா அழுகிறாய்

நீ தூங்கு நிறைய கனவு சொல்லுவேன்

நிதானமாக நீ கேளு ஆராரோ கண்ணா ஆராரோ

என் ஆறறிவே கண்ணே என் ஆறறிவே


உன் ஒரு வயதில் உன் கால் பதிக்கும் அது

உழுகின்ற பெரும் ஏர் ஏழுக்கும்

பின் பல மாதத்திலே உன் பால் பல் பிடிக்கும் அது

பழுத்துவிட்டால் சில உதிர்ந்துவிடும்

உதிர்ந்த முத்துகளை நீ விதைஎடுத்து

உழுகின்ற மண்ணிலே நீ முளைத்து

வருகின்ற காலத்திலே வளம் காடக்கு

வயதுக்கு நீ படிக்கையிலே இது போலக்கு

ஆராரோ கண்ணே ஆரரரோ கண்ணேஆராரோ

ஆறறிவே கண்ணே என் ஆறறிவே

ஆற்று மணலிலே அள்ள அதிசயமாய் மறைஞ்ச தண்ணியிலே

மெல்ல குழிதோண்டு நீ மேக நிழல் கண்டு பின்பு

புதையல் நீராக்கு பூமி சேறாக்கு


விளையாட்டில் விஞ்ஞானம் தோற்கடிச்சு

வெற்றி பெற்றுவிடு விடுதலை இயற்கைக்கு தந்துவிடு

உன்புகழ் தாக்கத்திலே, புகை போக்கதிலே

ஒசோனை உயர்த்திவிடு இந்த உண்மையை என்றும் கொடு

ஆராரோ கண்ணே ஆரரரோ கண்ணேஆராரோ

ஆறறிவே கண்ணே என் ஆறறிவே

வாலிப வயதினிலே, வயல் காட்டினிலே

வறுமை நீ ஒழிபதற்கு வாழ்கையை நட்டுவிடு
என் கண்ணே வருத்தத்தை நீ போக்கு

காலத்திலே உன் காதல் வேகத்திலே

சரித்திரம் மணந்துவிடு, பூமி சமத்துவம் கண்டுவிடு


ஆராரோ கண்ணே ஆரரரோ கண்ணேஆராரோ

ஆறறிவே கண்ணே என் ஆறறிவே

அதிகாலை தூக்கத்திலே

செல் போன் அலார சிணுங்களிலே இந்த
ரிங்டோன் அழுகை நான் கேட்டு

ஆன்ம சுவாசத்திலே, பெரும் ஆவேசத்திலே

ஆராரோ என்னை ஆராரோ வந்து
யார் எழுப்ப வந்து யார் எழுப்ப எப்ப நீ தூங்கு
என் ஆறறிவே எப்ப நீ விழிப்ப, எப்ப நீ விழிப்ப..........

Wednesday, September 15, 2010

புத்தம் புது தியாகிகள் ..




புற்றீசலாய் பூத்துக்குலுங்கும்
புத்தகக் கண்காட்சிகள் நாங்கள்;
பட்டமாய் பறக்கவேண்டிய வயதில்
பாலைவனத்தில்!

குடும்பம் காக்க எங்களின்
தோள்களைக் கொடுக்க;
கொதிக்கும் வெயிலும்
இதமாய் இருக்கும்!

உண்டாயா என உரிமையோடு
என் குடும்பம் கைப்பேசியில் கதைக்கும்;
இல்லை என்றாலும் ஆமாம் எனச் சொல்லி
அன்பான அஸ்திரம் அம்மாவின் வாயடைக்கும்!

கடல் தாண்டி வந்தாலும்
கடமை கண்ணை மறைக்க;
நிலைமை என்னை நெருக்க
மெழுகாய் உருகினேன் உழைக்க!

குருவியாகச் சேர்த்து
குடும்பத்திற்க்கு அனுப்ப;
நித்தமும் அவர்கள் என்னை நினைக்க
புத்தகத்தில் பதியாத
புத்தம் புது தியாகிகள் நாங்கள்!

எல்லாம் விடுத்து
தனிமையை எடுத்து
தாகத்தோடு நிற்கிறோம் பாலையில்;
அகம் மகிழும்
புறம் நெகிழும் என் போலவே
வீட்டிற்கு ஒரு படைவீரன்
குடும்பத்திற்க்காக இங்கே நான் காணுகையிலே!

Tuesday, September 14, 2010

தெரியவில்லை

 

நிகழ்வது தொடராய் இருந்தாலும்,
தொடர்வது நிகழத்தான்.
விடா முயற்ச்சியால் தான் வெற்றியா?
வெற்றிதான் விடாமுயற்சியா?
வாழ்க்கைதான் போரட்டமா?
போராட்டம் தான் வாழ்கையா?
இதயம் தான் உணர்வுகளா?
உணர்வதுதான் இதயமா?
முளை தான் யோசிக்கச் சொல்கிறதா?
யோசிபதுதான் முளையா?
சிந்துவது தான் இரத்தமா?
இரத்தம் தான் சிந்துகிறதா?
நம்பிக்கை தான் நண்பர்களா?
நண்பர்கள் தான் நம்பிக்கையா?
உறுகுவதுதான் மெழுகா?
மெழுகு தான் உருகுகிறதா?
உணர்ச்சி தான் துண்டுகிறதா?
தூண்டுவது தான் உணர்ச்சியா?
நெருப்பு தான் சுடுகிறாத?
சுடுவதுதான் நெருப்பா?
நீர் தான் மழையா?
மழைதான் நீரா?
கண்கள் தான் பார்க்கிறதா?
பார்ப்பது தான் கண்களா?
நேரத்தை காட்டி சோகம் நெருங்குகிறதா?
சோகத்தால் தான் நேரம் நெருங்குகிறதா?

நம்பிக்கை இல்லாமல்...!

 

 

வந்த வேலை
முடியும் நிலை
இங்கு இல்லை
வாழவும் வழி இல்லை

வயதை தொலைக்கிறோம்

பாசத்தை இழந்தோம்
பல வருடங்களாய்...

எல்லாமே கனவில் தான்

தாய் தந்தை பாசம்
வாரம் ஒரு முறை என்று ஆனது..
சில நேரங்களில்
மாதம் ஒரு முறைதான்
கைபேசி இல்லை என்றால்
எங்கள் பாசம் வெறும் காகிதத்தோடு
கரைந்து இருக்கும்...

மனைவியின் நினைவுகள்

உயிரை கொல்லும்
சில நேரங்களில்
என்னால் அவளும்
உணர்வை தொலைத்து
மரகட்டையை போல
வாழும் நிலை..

மனைவியை நினைத்து

நேசித்து துடிக்கும்
தருணங்களில்
பணத்தின் மீது அருவருப்பு
எங்கள் சந்தோசத்தை விழுங்கும் எமன்...

பல மரணங்கள்

எங்களுக்கு வெறும்
செய்தியாய் போனது

பிறந்த குழந்தை முதல்

சொந்தங்கள் எல்லாம்
நிழற் படமாய்
எங்களோடு..

எதிர்காலத்திற்காக

நிகழ்கால சந்தோஷங்களை புதைத்து
பொருள் தேடுகிறோம்..
முழுமையாக செல்வோம் என்ற
நம்பிக்கை இல்லாமல்...

வெற்றித் தோல்வி

 

 

விடியலின் விடிவெள்ளியாய்
வந்தவனே - நீ
வீழ்ந்து விட்டதற்காக
விழிகள் கலங்கலாமா...?

தோல்வி அடைந்ததற்காக

சந்தோசப்படு!
அது மட்டுமே உனக்கு
அனுபவங்களைக் கற்றுத்தரும்.

தோல்வி என்பது

மனம் தளர்வதர்கள்ள - அது
புதிய உற்சாகத்துடன்
மனம் தளிர்ப்பதர்க்கு!

வீழ்ந்து விட்டதற்காய்

வருத்தம் வேண்டாம் -
எழுச்சி என்பதே
வீழ்ச்சியின் வீழ்ச்சிதானே!

தரையில் வீழ்ந்தபிரகுதானே

ஆழம் விழுது
ஆணிவேர் போடுகிறது

விழுந்து எழுவதில்தானே

அலைகளின் அழகு
அடங்கியிருக்கிறது

இரவுகள் இல்லாமல்

என்றேனும் ஒருநாள்
பூமிப் பந்து சுலன்றதுண்டா...?

இரவின் தூக்கம் என்பது

இன்னும் சுறுசுறுப்பாய்
இயங்குவதற்கான முயற்சிதானே!

மேற்கில் தோற்கின்ற

சூரியன் தானே
மீண்டும் விடிவதர்கான்
நம்பிக்கை விதை!

பௌர்ணமி வெற்றியின்

வளர்பிறை முயற்சிகள் கூட
அமாவாசையில் இருந்துதானே
ஆரம்பமாகின்றது

தோல்வியும் கூட

காற்றினைப் போலவே
நிலையில்லாதது

தோல்விகள்

என்பவை துன்பங்கள் அல்ல - அவை
வாழ்க்கையின்
வெற்றியைக் காண
வழிகாட்டும் போர் முறைகள்

Monday, September 13, 2010

என் கிராமத்து நண்பர்கள்



நீ பெரியவன்
நான் பெரியவன்
என்ற வேறுபாடில்லை
வெண்ணிற வானமும்
செந்நிற மணல்பரப்பும்தான்
நாம் எல்லை கோடுகள்....

அரைக்கால் கால்சட்டையும்
அழுக்கான மேல்சட்டயும்தான்
நம்முடைய சீருடைகள்
காலை முதல் மாலை வரை
ஊரை சுற்றி வரும்
கழுகு கூட்டம் நாம்....

ஆற்றில் குளித்து
குளத்தில் நீந்தி
கிணற்றில் துள்ளி
விளையாடிய நம்
சிறு வயது பருவம்....

ஆற்றங்கரை மணலில்
நாம் அமைத்த வீடுகள்
ஒரு நாள் வாழும்
மணல் சிற்பங்கள்....

கள்ளி பால் எடுத்து
வட்டவாட்டமாய் நாம்விட்ட
நீர் முட்டைகள், இன்றும்
நம் சுவசகாற்றை
சுமந்த படித்தான் செல்கிறது
நம் ஊர் வயல்வெளிகளில்.....

கிழவன் கிளவியென்றால் நாம்
வம்பிழுக்க தவறியதில்லை
இருந்தும் பாட்டி கதைகேக்க
மறுத்ததில்லை- இன்றோ
நம் கதை சொல்லி பாடுகிறது
நம் வீட்டு திண்ணைகள்....

ஒவ்வொரு முறையும் நான்
முகம் பார்க்கும் போதும்
கில்லி அடித்து உடைந்த
என் நெற்றி பரப்பின்
தழும்புகள் நினைவுபடுத்துகிறது
நம் சிறுவயது விளையடினை....

நாம் பிடித்த பட்டாம்பூச்சியின்
நிறங்களை பட்டங்களுக்கு கொடுத்து
வானுயர பறக்க வைத்தோம்
இன்றும் பறந்து கொண்டிருகிறது
பட்டாம்பூச்சியின் சிறகுகளில்....

நாம் விளையாடிய
மணல் பரப்பும் நம்மைவிட்டு
பிரிய மனமில்லாமல்
நம் உடைகளோடு ஒட்டிக்கொள்ளும்
அதுவே நம் சட்டையின் நிரமென்றாகும்....

நம் நண்பன் வட்டத்தில்
ஒரு நண்பன் பாம்புதீண்டி
இறந்தபோது கலங்கிய
விழிகளோடு ஊரில் உள்ள
பாம்புகள் அனைத்தையும்
அடித்து கொன்று
பலிதீர்த்தோம் நண்பனுக்காக....

பள்ளியோடு சிலர் பிரிய
கல்லூரியோடு தொடர்ந்தோம்
நம் நட்பு பயணத்தை
இன்றோ நாம் எங்கு
முடிக்கபோகிறோம் என்று
தெரியாமல் ஆளுக்கொரு
திசையில்- அடிகடி நண்பர்கள்
என்ற அடையாளத்தை மட்டும்
காட்டி கொண்டு....

ஒவ்வொரு முறையும்
நான் ஊருக்கு வரும்போது
பேருந்து இருக்கையோடு
பகிர்ந்துகொள்ள தவறியதில்லை
நம் நட்பு நாட்களை....

நமக்காக வாழ்ந்த நாம்
இன்றோ பிற்காக வாழ்கிறோம்
என்றோ ஒரு நாள் பார்க்கிறோம்
முழுவதுமாய் நலம் கூட
விசாரிக்க முடிவதில்லை
நண்பனிடத்தில்....

ஊர் தெருக்களில் நடந்து
செல்லும் போதும்
வயல் வெளிகளில்
தனியே அமரும்போதும்
நாம் அப்படியே இருந்திருக்க
கூடாதயென்று கண் கலங்க
வைக்கிறது நம்
சிறுவயது ஞாபகங்கள்....

கள்ளி செடியிலும்
ஆலமர விழுதுகளிலும்
நாம் உடைத்த அய்யனார்
சிலையிலும் இன்றும்
அழியமல்தான் உள்ளது
நம் பெயர்கள் நினைவுகலாய்....

இனி கிடைக்காத அந்த
நாட்களை நினைத்துதான்
இனிதே நகர்கிறது என்
இன்றய நாட்கள்.....

வெளிநாடு போனேன்

 

 

பெரிய துண்டாக வாங்கி
தன் உடம்பை மறைத்துக்கொள்ள
ஆசைப்பட்ட அப்பாவிற்கு
சட்டை துணிகளும்........

வேறு வழியின்றி

பற்றாக்குறைக்கு
எனக்காக
தாலியை விற்று
பணம் கொடுத்தனுப்பிய அம்மாவிற்கு
நகைகளும்
வாங்கிக்கொண்டு
நான்கு வருடம் கழித்து
வந்து சேர்ந்தேன்
வெளிநாட்டிலிருந்து........

என் வீடிருக்கும் வீதியின்

முனையில் குடியிருக்கும்
பொன்னம்மாள் கிழவி
என்னை நலம் விசாரித்துவிட்டு
வாய்பொத்தி சொன்னாள்
மறக்காம
உன் அப்பன் ஆத்தா
போட்டோவுக்கு
மாலை வாங்கிட்டு போயி
சாமி கும்பிடு............

கதறி அழுதவனை

கண்கொட்டாமல்
பார்த்துக்கொண்டிருந்தான்
பூக்கடைக்காரன்......!!!

Wednesday, September 8, 2010

முரண்பாடுகள்

 

 

விளம்பரம் செய்யாதே
என்று-விளம்பரம்...

மது நாட்டிற்கும் வீட்டிற்கும்

கேடு
என்று-மது பாட்டல்...

புகை நமக்கு பகை

என்று-சிகரட்...

பிறர் செய்யும் தவறுக்கு

அன்பளிப்பு
revaluation ...

தவறு ஒன்று

தீர்ப்பு இரண்டு
என்று-நீதி மன்றம்...

என்று மாறும்

இந்த முரண்பாடுகள்
ஏக்கங்களுடன்
இந்தியன்....

தமிழ்திருநாட்டின் பெருமைகள்...



என் நாசிக்கு அருகில் வந்த பின், காற்று தான் செல்லும் வழி மறந்து, என்னுள் செல்ல மறுத்தாலும்,

நான் மறித்து போனாலும்!

மறு பிறவி எடுத்தேனும் என் தமிழ் திருநாட்டின் பெருமைகளை கேட்போருக்கு சொல்லுவேன்....


என் தமிழ் திருநாட்டின் பெருமைகளை சொல்ல நினைத்தால் !!!
என் தமிழ் திருநாட்டின் பெருமைகளை சொல்ல நினைத்தால் !!!

எந்த தமிழனுக்கும் வார்த்தைக்கு பஞ்சம் இருக்காது!!!
சொல்லும் அவனுக்கு ஆயுள் மட்டும் பத்தாது!!!

ஒன்று ஒன்றாய் சொல்லுகிறேன் !

உலகுக்கு பொதுமறை கொடுத்ததும் என் தமிழ் நாடு!!!
கடை ஏழு வள்ளல்க ள் வாழ்த்தும் என் தமிழ் நாடு!!!

காவிரி, தென்பென்ணை, பாலாறு பாய்த்து வளம் கொழிக்கும் என் தமிழ் நாடு!
மூத்த மொழி பேசும் மூத்தோர்கள் வாழ்ந்தது, வாழ்வது என் தமிழ்நாடு!

வண்ணத்துபூச்சி சிறகின் ஓவியத்தை விட அழகாய் அமைத்தது என் தமிழ்நாடு!
கன்னிபெண்ணின் புன்னகைக்கு போட்டி போடும், முல்லையின் கொடி படர,
தேர் கொடுத்த இடம் இந்த தமிழ் நாடு!

பிற மொழி கவிக்கு சிலை எடுத்தது என் தமிழ்நாடு!
பொய்யா மொழி கவிக்கும் சிலை எடுத்தது என் தமிழ்நாடு!

மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கு மணம் உண்டு என்று சென்னவர் வாழ்ந்தது இந்த தமிழ்நாடு!
மண்ணின் பெருமை காக்கும் பெண்கள் இருப்பதும் என் தமிழ்நாடு!

நீதிக்காக தமையனை தேரை ஏற்றி கொன்ற மன்னன் வாழ்ந்தது என் தமிழ் நாடு!
தன் பிழைக்காக உயிர் நீத்த மன்னன் இருந்தது என் தமிழ் நாடு!

கலைக்கு மதிப்பு கொடுப்பது என் தமிழ் நாடு!
கலைக்கு மரியாதை செய்தவர்களுக்கு ,அதிகாரம் கொடுத்தது அழகு பார்த்தது என் தமிழ் நாடு!

என் தமிழ் திருநாட்டின் பெருமைகளை எழுத முயற்சித்தால் !!!
உலக காகித ஆலையின் உற்பத்தி பத்தாது!!!
எழுதும் என் செந்நிற குருதியின் வேகமும் நிற்காது!!!

என் மனதின் திறவுகோலான, என் எழுதுகோலுக்கு ஓய்வு கொடுக்க நினைக்கிறன்!
உழைக்கும் மனிதனுக்கு ஓய்வு ஒருமுறை என்பதினை நினைத்து மீண்டும் என் மனதினை திறக்கிறேன்!

நான் பிறந்த பொழுது அழுதேன் !
என் இதயம் மௌன கீதம் வாசிக்கும் நேரம் நெருகியதிணை அறிந்து மகிழ்ச்சி!
ஏனென்றால் என் காற்று அடைத்த உடல் கூட என் தமிழ் நாட்டின் மண்ணுக்குள்!

என் தமிழ் நாடு ! என் தமிழ் நாடு ! சுயநலம் மிக்க வார்த்தை ,
இந்த சுயநலம் எனக்கு போதும்!!!

Tuesday, September 7, 2010

சின்ன சின்ன ஆசைகள்...




நான்...
வானில் பறந்து
மேகமாய் ஓட
வேண்டும்!

நான்...
நிலவில் விழுந்து
வின்மினாய் விழ
வேண்டும்!

நான்...
தென்றலில் புகுந்து
புயலாய் மாற
வேண்டும்!

நான்...
மலரில் நுழைந்து
தேனாய் சிந்த
வேண்டும்!

நான்...
கடலில் அலைந்து
கரையாய் ஒதுங்க
வேண்டும்!

நான்...
பகலில் பட்டாம்
பூச்சியாய் பறக்க
வேண்டும்!

நான்...
இரவில் மின்மினி
பூச்சியாய் திரிய
வேண்டும்!

நான்...
தாமரை இலையில்
பனித்துளியாய் தூங்க
வேண்டும்!

நான்...
மரத்து கிளையில்
இலையாய் தொங்க
வேண்டும்!

என்றும் நான்
இயற்கை உடன்
வாழ வேண்டும்!

சாதிக்க முடிவும்...

இளைஞனே...
நம்மால் இந்த உலகில்
சாதிக்க முடிவும்
என்று நம்பிக்கை கொல்
உள் மனதில்!

இளைஞனே...

உலக உருண்டையை
நம் கையால்
சுழற்ற முடிவும்
என்று தன்னம்பிக்கை கொல்
உன் உணர்வில்!

இளைஞனே...

இவை இரண்டும்
உனக்குள் எழுந்து விட்டால்
உன் இதய துடிப்பின்
ஓசையை கேட்டுப்பார்
அது சொல்லும் பல
வழிகள் சாதிக்க!

இல்லை என்றால்.....


உன் உயிர் மூச்சின்

பாஷையை கேட்டுப்பார்
அது சொல்லும் சில
வழிகள் சாதிக்க!

செல் இளைஞனே

செல் சாதிக்க...

கடவுளின் நண்பன்..!!!

கடவுளின் நண்பன்..!!! - நண்பர்கள் கவிதை


நீ
எனக்கு
இருக்கும்
தைரியத்தில் தான் நண்பா,
என்
வேண்டுதல்கள்
தேவைகள்
எதிர்பார்ப்புகள்
எதையும்
கடவுள்
கண்டுகொள்வதேயில்லை...!!!

"எனக்கு மட்டுமல்ல"

நீ கடவுளுக்கும் மிக
நம்பிக்கையானவன்...!!!

நட்புடன்...

காதலின் சின்னம்
இதயம் என்றால்...?
நட்பின் சின்னம்
உயிர் ஆகும்!

காதல் கல்லறைக்குள்

வாழ்த்தால்
நட்பு கருவறைக்குள்
வாழும்!

காதலின் இலக்கணம்

காதலி என்றால்...?
நட்பின் இலக்கணம்
நண்பன் ஆகும்!

காதல் கண்ணீரை

சிந்த வைக்கும்
நட்பு கண்ணீரை
துடைக்க வைக்கும்!

காதல் ஆசைக்குள்

துடிக்கும்
நட்பு இதய ஓசைக்குள்
துடிக்கும்!

என்றும் நட்புடன்

நான்.....

Sunday, September 5, 2010

விழித்தெழு தோழா ...

எங்கோ பிறந்து
வளர்ந்து ,
நட்புக்காற்றைச்
சுவாசித்துக்
காதல் சேற்றைப்
பூசிக்கொள்ளத்
துடிக்கும் மனமே,
உனக்கொரு உண்மை.....

எழுத்துக்கள் மூலம்

சந்தித்த எதிர்பாராத
உறவுகள் ,
நெஞ்சில் வருத்தத்தை
விதைத்து விட்டுச்
செல்கின்றன....

வாயார பேசிவிட்டு

வார்த்தை இல்லாமல்
சிக்கித்தவிக்கும் வலி
இதழ்களோடு ,
இதயத்திற்கும்
சேர்த்து....

மறுக்கத் தவிக்கும்

மனதிற்கும் ,
ஏற்க முடியாத
இதழுக்கும்
எடுத்துக்காட்டு,
வறுமையில்
பாலில்லா அன்னையின்
முகம் பார்த்து
பசியில் துடிக்கும்
பச்சிளங் குழந்தையின்
முகம்......

கிணற்றில் சிக்கிய

எனக்கு காக்கும்
கரங்கள் ஆயரம்
மீட்க வந்தாலும்
முதலை வாயில்
சிக்கித்தவிக்கும்
என் கால்களின்
வலியறியும் ஆசான்
என் இதயம் மட்டுமே....

ம்ம்ம்...

அடிமை ,
பெண்மைக்கு
புதிதல்ல....

விழித்தெழு தோழா...

விடியும் உனக்கென
ஒரு காலை.....!

Friday, September 3, 2010

கவிதை : அம்மா

அம்மா.
உன்னை உச்சரிக்கும் போதெல்லாம்
எனக்குள்
நேசநதி
அருவியாய் அவதாரமெடுக்கிறது.
மழலைப் பருவத்தின்
விளையாட்டுக் காயங்களுக்காய்
விழிகளில் விளக்கெரித்து
என்
படுக்கைக்குக் காவலிருந்தாய்.
பசி என்னும் வார்த்தை கூட
நான் கேட்டதில்லை
நீ
பசியை உண்டு வாழ்ந்திருக்கிறாய் .
என் புத்தகச் சுமை
முதுகை அழுத்தி அழுதபோது
செருப்பில்லாத பாதங்களேடு
இடுப்பில் என்னை
இரண்டரை மைல் சுமந்திருக்கிறாய்.
அகரம் அறிமுகமான ஆரம்ப நாட்களில்
அன்பின் அகராதியை எனக்கு
அறிமுகப் படுத்தியது
என் தலை கோதிய உன் விரல்களல்லவா ?
எனது சிறு சிறு வெற்றிகளுக்கு
கோப்பைகள் கொடுத்தது
உனது
இதயத் தழுவலும்
பெருமைப் புன்னகையுமல்லவா ?
வேலை தேடும் வேட்டையில்
நகர நெரிசல்களில் கீறல் பட்ட போது
ஆறுதல் கரமானது
உனது ஆறுவரிக் கடிதமல்லவா ?
எனக்கு வேலை கிடைத்தபோது
நான் வெறுமனே மகிழ்ந்தேன்
நீதானே அம்மா
புதிதாய்ப் பிறந்தாய் ?
உனக்கு முதல் சம்பளத்தில்
வாங்கித்தந்த ஒரு புடவையை
விழிகளின் ஈரம் மறைக்க
கண்களில் ஒற்றிக் கொண்டாயே
நினைவிருக்கிறதா ?
இப்போதெல்லாம்
என் கடிதம் காத்து
தொலை பேசியின் ஒலிகாத்து
வாரமிருமுறை
போதிமரப் புத்தனாகிறாய்
வீட்டுத் திண்ணையில்.
எனக்கும்
உன் அருகாமை இல்லாதபோது
காற்றில்லா ஓர் வேற்றுக் கிரகத்துள்
நுழைந்த வெறுமை.
போலியில்லா உன்முகம் பார்த்து
உன் மடியில் தலைசாய்த்து
என் தலை கோதும் விரல்களோடு
வாழத்தான் பிடித்திருக்கிறது எனக்கும்
இந்த
வாழ்க்கை நிர்ப்பந்தங்கள் தான்
வலுக்கட்டாயமாய்
என் சிறகுகளைப் பிடுங்கி
வெள்ளையடிக்கின்றன.

நீயே ஒரு கவிதை - அம்மா

அம்மாவை பற்றி கவிதையா
நிச்சயமாக முடியாது என்னால்
காதலியை பற்றி எழுத
ஒரு காகிதமும்
சில பொய்களும் போதும்...!
அம்மா உன்னை பற்றி
எழுத உலகத்தில் உள்ள
அணைத்து காகிதங்களும் பத்தாது
என்னை பொறுத்தவரை
கடவுளை நான் நம்ப காரணமே
எதை எதையோ படைத்த அவன்
அம்மாவையும் படைததர்க்காகதான்..!
அம்மா
நான் சொன்ன
முதல் வார்த்தை..
எல்லோரும் சொல்லும்
முதல் வார்த்தை...
..மா அம்மா
நாங்கள் அன்றே
சொன்ன முதல் கவிதை அம்மா..!