Tuesday, September 14, 2010

தெரியவில்லை

 

நிகழ்வது தொடராய் இருந்தாலும்,
தொடர்வது நிகழத்தான்.
விடா முயற்ச்சியால் தான் வெற்றியா?
வெற்றிதான் விடாமுயற்சியா?
வாழ்க்கைதான் போரட்டமா?
போராட்டம் தான் வாழ்கையா?
இதயம் தான் உணர்வுகளா?
உணர்வதுதான் இதயமா?
முளை தான் யோசிக்கச் சொல்கிறதா?
யோசிபதுதான் முளையா?
சிந்துவது தான் இரத்தமா?
இரத்தம் தான் சிந்துகிறதா?
நம்பிக்கை தான் நண்பர்களா?
நண்பர்கள் தான் நம்பிக்கையா?
உறுகுவதுதான் மெழுகா?
மெழுகு தான் உருகுகிறதா?
உணர்ச்சி தான் துண்டுகிறதா?
தூண்டுவது தான் உணர்ச்சியா?
நெருப்பு தான் சுடுகிறாத?
சுடுவதுதான் நெருப்பா?
நீர் தான் மழையா?
மழைதான் நீரா?
கண்கள் தான் பார்க்கிறதா?
பார்ப்பது தான் கண்களா?
நேரத்தை காட்டி சோகம் நெருங்குகிறதா?
சோகத்தால் தான் நேரம் நெருங்குகிறதா?

No comments:

Post a Comment