Tuesday, September 7, 2010

சின்ன சின்ன ஆசைகள்...




நான்...
வானில் பறந்து
மேகமாய் ஓட
வேண்டும்!

நான்...
நிலவில் விழுந்து
வின்மினாய் விழ
வேண்டும்!

நான்...
தென்றலில் புகுந்து
புயலாய் மாற
வேண்டும்!

நான்...
மலரில் நுழைந்து
தேனாய் சிந்த
வேண்டும்!

நான்...
கடலில் அலைந்து
கரையாய் ஒதுங்க
வேண்டும்!

நான்...
பகலில் பட்டாம்
பூச்சியாய் பறக்க
வேண்டும்!

நான்...
இரவில் மின்மினி
பூச்சியாய் திரிய
வேண்டும்!

நான்...
தாமரை இலையில்
பனித்துளியாய் தூங்க
வேண்டும்!

நான்...
மரத்து கிளையில்
இலையாய் தொங்க
வேண்டும்!

என்றும் நான்
இயற்கை உடன்
வாழ வேண்டும்!

No comments:

Post a Comment