Monday, September 13, 2010

என் கிராமத்து நண்பர்கள்



நீ பெரியவன்
நான் பெரியவன்
என்ற வேறுபாடில்லை
வெண்ணிற வானமும்
செந்நிற மணல்பரப்பும்தான்
நாம் எல்லை கோடுகள்....

அரைக்கால் கால்சட்டையும்
அழுக்கான மேல்சட்டயும்தான்
நம்முடைய சீருடைகள்
காலை முதல் மாலை வரை
ஊரை சுற்றி வரும்
கழுகு கூட்டம் நாம்....

ஆற்றில் குளித்து
குளத்தில் நீந்தி
கிணற்றில் துள்ளி
விளையாடிய நம்
சிறு வயது பருவம்....

ஆற்றங்கரை மணலில்
நாம் அமைத்த வீடுகள்
ஒரு நாள் வாழும்
மணல் சிற்பங்கள்....

கள்ளி பால் எடுத்து
வட்டவாட்டமாய் நாம்விட்ட
நீர் முட்டைகள், இன்றும்
நம் சுவசகாற்றை
சுமந்த படித்தான் செல்கிறது
நம் ஊர் வயல்வெளிகளில்.....

கிழவன் கிளவியென்றால் நாம்
வம்பிழுக்க தவறியதில்லை
இருந்தும் பாட்டி கதைகேக்க
மறுத்ததில்லை- இன்றோ
நம் கதை சொல்லி பாடுகிறது
நம் வீட்டு திண்ணைகள்....

ஒவ்வொரு முறையும் நான்
முகம் பார்க்கும் போதும்
கில்லி அடித்து உடைந்த
என் நெற்றி பரப்பின்
தழும்புகள் நினைவுபடுத்துகிறது
நம் சிறுவயது விளையடினை....

நாம் பிடித்த பட்டாம்பூச்சியின்
நிறங்களை பட்டங்களுக்கு கொடுத்து
வானுயர பறக்க வைத்தோம்
இன்றும் பறந்து கொண்டிருகிறது
பட்டாம்பூச்சியின் சிறகுகளில்....

நாம் விளையாடிய
மணல் பரப்பும் நம்மைவிட்டு
பிரிய மனமில்லாமல்
நம் உடைகளோடு ஒட்டிக்கொள்ளும்
அதுவே நம் சட்டையின் நிரமென்றாகும்....

நம் நண்பன் வட்டத்தில்
ஒரு நண்பன் பாம்புதீண்டி
இறந்தபோது கலங்கிய
விழிகளோடு ஊரில் உள்ள
பாம்புகள் அனைத்தையும்
அடித்து கொன்று
பலிதீர்த்தோம் நண்பனுக்காக....

பள்ளியோடு சிலர் பிரிய
கல்லூரியோடு தொடர்ந்தோம்
நம் நட்பு பயணத்தை
இன்றோ நாம் எங்கு
முடிக்கபோகிறோம் என்று
தெரியாமல் ஆளுக்கொரு
திசையில்- அடிகடி நண்பர்கள்
என்ற அடையாளத்தை மட்டும்
காட்டி கொண்டு....

ஒவ்வொரு முறையும்
நான் ஊருக்கு வரும்போது
பேருந்து இருக்கையோடு
பகிர்ந்துகொள்ள தவறியதில்லை
நம் நட்பு நாட்களை....

நமக்காக வாழ்ந்த நாம்
இன்றோ பிற்காக வாழ்கிறோம்
என்றோ ஒரு நாள் பார்க்கிறோம்
முழுவதுமாய் நலம் கூட
விசாரிக்க முடிவதில்லை
நண்பனிடத்தில்....

ஊர் தெருக்களில் நடந்து
செல்லும் போதும்
வயல் வெளிகளில்
தனியே அமரும்போதும்
நாம் அப்படியே இருந்திருக்க
கூடாதயென்று கண் கலங்க
வைக்கிறது நம்
சிறுவயது ஞாபகங்கள்....

கள்ளி செடியிலும்
ஆலமர விழுதுகளிலும்
நாம் உடைத்த அய்யனார்
சிலையிலும் இன்றும்
அழியமல்தான் உள்ளது
நம் பெயர்கள் நினைவுகலாய்....

இனி கிடைக்காத அந்த
நாட்களை நினைத்துதான்
இனிதே நகர்கிறது என்
இன்றய நாட்கள்.....

1 comment: