Wednesday, September 22, 2010

கரிசக்காடு....

வானம் பார்த்து காத்துக்கொண்டிருப்பது
வயற்காடு மட்டுமல்ல, அவர்களின் வாழ்க்கையும் தான்...

வெட்ட வெளிச்சத்தில்

வெயிலின் மடியில் - அவர்களின் தினப் பொழுதுகள்..

நிதர்சனமான உறக்கம்

நிலவின் அரவணைப்பில்- அவர்களின் நடுநிசிகள்..

மழை ஏதுமில்லாத தேசத்தில்,

உழைப்பை மட்டுமே விதைகளாக்கியவர்கள்...

போட்டு எடுக்கமுடியாத நிலையில் முதலீடு

நட்டும், முளைக்காத விதைகளை போல...

ஒதுக்குப்புற மூங்கில் காடுகளை,

ஒருவழியாக வெட்டிச்சாய்த்து,
படிக்கட்டு முதல் பந்தல் வரை
பல்லாயிரம் பேர்களுக்கு மேடை போட்டு
மாண்புமிகுக்களின் முன்னிலையில் நடக்கிறது
"மழை வேண்டி யாகம்".

வேண்டா வெறுப்போடு சிரிக்கிறான்,

"கண்கெட்ட பிறகு ......... எதற்கு ? "

போட்டு எடுக்கமுடியாத நிலையில் முதலீடு

நட்டும், முளைக்காத விதைகளை போல...

வனம் வேண்டாம்..

ஒரே ஒரு மரம் போதும் வீட்டிற்க்கு,
ஒரு சரித்திரம் காய்ந்து கொண்டிருக்கிறது...

No comments:

Post a Comment