Tuesday, September 14, 2010

வெற்றித் தோல்வி

 

 

விடியலின் விடிவெள்ளியாய்
வந்தவனே - நீ
வீழ்ந்து விட்டதற்காக
விழிகள் கலங்கலாமா...?

தோல்வி அடைந்ததற்காக

சந்தோசப்படு!
அது மட்டுமே உனக்கு
அனுபவங்களைக் கற்றுத்தரும்.

தோல்வி என்பது

மனம் தளர்வதர்கள்ள - அது
புதிய உற்சாகத்துடன்
மனம் தளிர்ப்பதர்க்கு!

வீழ்ந்து விட்டதற்காய்

வருத்தம் வேண்டாம் -
எழுச்சி என்பதே
வீழ்ச்சியின் வீழ்ச்சிதானே!

தரையில் வீழ்ந்தபிரகுதானே

ஆழம் விழுது
ஆணிவேர் போடுகிறது

விழுந்து எழுவதில்தானே

அலைகளின் அழகு
அடங்கியிருக்கிறது

இரவுகள் இல்லாமல்

என்றேனும் ஒருநாள்
பூமிப் பந்து சுலன்றதுண்டா...?

இரவின் தூக்கம் என்பது

இன்னும் சுறுசுறுப்பாய்
இயங்குவதற்கான முயற்சிதானே!

மேற்கில் தோற்கின்ற

சூரியன் தானே
மீண்டும் விடிவதர்கான்
நம்பிக்கை விதை!

பௌர்ணமி வெற்றியின்

வளர்பிறை முயற்சிகள் கூட
அமாவாசையில் இருந்துதானே
ஆரம்பமாகின்றது

தோல்வியும் கூட

காற்றினைப் போலவே
நிலையில்லாதது

தோல்விகள்

என்பவை துன்பங்கள் அல்ல - அவை
வாழ்க்கையின்
வெற்றியைக் காண
வழிகாட்டும் போர் முறைகள்

No comments:

Post a Comment