Friday, September 17, 2010

சுவிஸ் வங்கி

 

சுரண்டிய சொத்தெல்லாம்
சுவிஸ் வங்கியில நாம்
சுதந்திரமாய் இருக்கிறோமோ
ஒண்ணுமே புரியல

பாடுபட்ட மக்களெல்லாம்

பஞ்சத்திலே இருக்குது - அது
பழக்கமாக இலவசத்தில்
கொஞ்சமாய் சிரிக்குது

ஏர் பிடிச்ச காணியெல்லாம்

இயந்திரம்தான் நோறுக்குது - இப்போ
இருட்டில் நின் ற இலஞ்சம் கூட
எமனாய்தான் பிடிக்குது

குறுக்கு புத்தி கட்சியெல்லாம்

கொடியுந்தான் பிடிக்குது - அது
கும்ம்பிட்டுதான் காசு கொடுத்து
கொடுஞ் ஆட்சி செய்ய நினைக்குது

பதினெட்டு வயசினிலே

பலருக்கு பைத்தியம்தான் பிடிக்குது
பாராட்டும் நீதித்துறையோ
பார்த்து தேர்தலிலே குதிக்குது


விலைவாசி ஏற்றதிலே

விண்ணும் கூட குனியுது
வியர்வை சிந்தும் மக்களெல்லாம்
விதி வங்க கடலில் மிதக்குது

நாடாளும் தலைவன் முன்னால்

நாலு வயதில் பிச்சைதான் - இப்போ
போராடும் சில கூட்டத்துக்கு இவர்
போடுவதும் பச்சை சட்டம் தான்

தாரள மயமாக்கதிலே

தனியாரு வழிபோக்கதிலே
யூகத்திலே ஒரு விலை பேசி
உருவாகும் அணு உலையிலே பல உயிர் வீசி

போபால் விஷ தாக்கத்திலே

புரைபோன ஒரு வேகத்திலே
புது சட்டம் செய்வார்
புரியா திட்டம் செய்வார்

அமெரிக்காவில் அணு விபதென்றால்

ஆயுள் காப்பீடு பத்தாயிரம் கோடியாகும்
அடிமையான நம் நாட்டினிலே நாம்
பிழைத்திருந்தால்
ஆயிரத்தி ஐநூறு கோடியாகும்

என்றே விதி செய்வார்

வினை பல செய்வார் அவர்
வீடெல்லாம் பல நாடாகும் - நாம்
விழிதெழுந்தால் அது தூளாகும்

நரசிங்க கவி நான் சொல்வேன்

நண்பா நாம் விழித்தெழுந்தால்
பலம் மீட்டிடலாம் ஓட்டு வாள் கொண்டு
பார் புகழ் காட்டிடலாம்.

No comments:

Post a Comment