Tuesday, October 25, 2011

கொண்டாடித்தான் ஆக வேண்டும் இந்த தீபாவளியை…

வாங்கும் சம்பளம் வறட்சி நிலைக்கும் கீழிருக்க…

வயதாகி போனதினால் தேவைகளும் அதிகரிக்க…


அடிக்கடி பண்டிகைகள் அடங்காமல் அலைக்கழிக்க…


புத்தாடை பட்டாசு வனப்பில் ஊர் மகிழ்ந்திருக்க…


சுற்றுவட்டாரம் சுகங்களில் குதூகலிக்க…




எங்கேயாவது கெஞ்சிக் கூத்தாடி

கடன் வாங்கியாவது கொண்டாடித்தான் ஆக வேண்டும்
இந்த தீபாவளியை…

என் பிள்ளைகளுக்காக…

No comments:

Post a Comment