என் கல்லூரி இருக்கையே!!!
அனுமதி பெறாமல் உன்மேல்
நான் அமரும்பொழுது என்னை
முதுகோடு சேர்த்து அனைத்துக் கொண்டாயே!
கொஞ்சம் கொஞ்சமாய்
எனக்கு பழகக் கற்றுத் தந்தாய்
பழகினேன், நண்பர்கள் என்றார்கள்!
கோபம் வரும் பொழுது
எனக்கு சிரிக்க கற்றுத் தந்தாய்
சிரிக்க வைத்தேன், ரசிகன் என்றார்கள்!
அவள் கண்களை காட்டி காட்டி
எனக்கு காதலிக்க கற்றுத் தந்தாய்
காதலித்தேன், கவி என்றார்கள்!
நானும் நண்பனும் நட்பு என்று
உறவாடி மகிழ்கையில் நீ
அண்டை இருக்கையுடன் தோள் சேர்த்து
வெற்றியில் தட்டிக்கொண்டாய்!
தலைவலியில் உன் மேல்
தலை சாய்க்கும் பொழுதெல்லாம்
என் தலைக் கோதி என்னை ஏற்றுக்கொண்டாய்!
முதல் மாணவனாய் மதிப்பெண்களை
சொன்ன பொழுது ஆனந்தமாயும்
தோல்வியில் சோகமாயும்
என் கண்ணீரை வாங்கி கொண்டாய்!
கோபத்தில் எத்தனை முறை
பேனா முனையால் உன்னை காயப்படுத்திருகிறேன் !
ஆத்திரத்தில் எத்தனை முறை
கீழே தள்ளி இருக்கிறேன்!
எத்தனை முறை எட்டி உதைதிருக்கிறேன்!
அத்தனையும் தாங்கிக் கொண்டு
இந்த நான்கு ஆண்டுகளையும்
என்னையும் தாங்கிக் கொண்ட உன்னை
இங்கேயே விட்டு செல்கிறேன்.
நான் உன்மேல் பழகிய கையெழுத்துகள்
மட்டும் போதும் என்று புதியவனை
ஏற்றுக் கொள்ளுமுன் ஒரு நிமிடம்
என் வேண்டுதலை கேள்,
ஆண்டுகள் கடந்து என் வெற்றிகள்
முழுவதும் உன் காலடியில் சமர்பிக்க
வரும்பொழுது மீண்டும் உன் கரம் விரித்து
அமர ஒரு இடம் தருவாயா நான்
அமர்ந்து எழுந்த என் கல்லூரி இருக்கையே!!!
Nice...
ReplyDeleteBeautifule Feeling My Freind. Really Nice
ReplyDeletethanks...
ReplyDelete