Friday, November 19, 2010

அன்பிற்கு உயிர் கொடுத்தவளே!!!...


*
எத்தனை கடவுளிடம்
எனக்காக வேண்டியிருப்பாய்!
எத்தனை மணித்துளிகள்
எனக்காக காத்திருந்தாய்!
எத்தனை இரவுகள்
என் வரவுக்காக விழித்திருந்தாய்!
எத்தனை ஆண்டுகள்
இரவில் விழிக்காமல் நானிருக்க
விழித்து கொண்டு நீ இருந்தாய்!
*
கருவறையில் இருக்கும்
கல்லைவிட,கள்ளகபடமில்லாத,
கருவறையில் சுமந்தவளே,
கடவுள் என்பதை நீ உணர்த்தினாய்!
*
என் வலிக்காக நான் அழுதேன்.
வளர்த்தவளுக்காக நான் அழுததில்லை...
காரணம் தெரியாமல் என்னோடு நீ அழுதாய்!
*
இதயத்தை உதைத்தவளுக்காக
வலியால் நான் அழுதேன்...
காரணம் ஏதும் கேட்காமல் அப்போதும்
என்னுடன் நீ அழுதாய்!
*
அன்பு ஒன்றே உலகில்
சிறந்தது என்பதை தெரியவைத்தாய்!
அன்புதான் அழுகையாக
வெளிப்படுகின்றது என்பதை புரியவைத்தாய்!
அன்பே அன்னை!அன்புதான் உலகம்
என்பதை உணர்த்தினாய்!
*
கருவறையில் இருந்தபோது
கரு என்று பாராமல்,
உன் உயிரை பற்றி நினைக்காமல்
கருவிற்கு ஓர் உயிர் கொடுத்தாய்!
*
மழலையாக தவழ்ந்தபோது
இரத்தம் என பாராமல்,
என் கண்ணீரை துடைக்க
இரத்தத்தை பாலாக மாற்றி,
எனை மகிழச்செயதாய்!
*
மனிதனாக வளர்ந்தபோது
சோகம் தெரியாமல் நான் வாழ,
சுகமாக நான் இருக்க,
நலமுடன் நான் வாழ,
எனக்காக என்று நான் இருந்தபோது
தனக்காக என்று நீ இல்லாமல்,
இரத்தத்தை உருக்கி
வியர்வை சிந்தினாய்!
*
அன்றும் எனக்காக
கண்ணீர் வடித்தாய்!
இன்றும் எனக்காக
கண்ணீர் வடிக்கின்றாய்!
*
இதுவரை செய்த தவறுகளுக்காக
தலை வணங்குகின்றேன்!
வாழ்க்கையை தொலைக்க
நான் விரும்பவில்லை...
இதோ!கடவுளாக
உனை வணங்குகின்றேன்!
*
கடல் தாண்டி
பயணம் செய்ய விருப்பமில்லை.
நீயே!எந்தன்
அசையா சொத்தாக இருக்கும்போது!
காற்றை
சுவாசிக்க விருப்பமில்லை...
நீயே!எந்தன்
மூச்சாக இருக்கும்போது!
ஒலியினை கூட
கேட்க விருப்பமில்லை....
நீயே!எந்தன்
செவியாக இருக்கும்போது!
*
அத்தனையும்,
இத்தனையும்,
இத்தனை நாட்கள்
நான் இழந்ததுபோதும்...
இனி,அன்பை மட்டும் என்றும்
நான் இழக்க விரும்பவில்லை...
*
தாயே!உனையே!
என் இதயத்தில் நேசிக்கிறேன்!
உன்னை மட்டுமே
உயிரின் மூச்சாக சுவாசிக்கிறேன்!
*
இனி,எனக்கு
ஒரு பிறப்பு என்றால்,
அது உன் கருவறையாக
மட்டும்தான் இருக்க வேண்டும்.
எனக்கு இறப்பு என்றால்,
அதுவும் உன் மடியாக
மட்டுதான் இருக்க வேண்டும்....
*
இனி,உனக்கு
ஒரு பிறப்பு என்றால்,
எனக்கு மகளாக
மட்டும்தான் நீ பிறக்க வேண்டும்...
மகளாக பிறந்து,
தாயாக இருந்து,
எனை நீ
வளர்க்க வேண்டும்.....
*
கடவுள்
என்பவன்
ஒருவன் இருந்தால்,
இதனையேற்று
எனக்காக
செவி சாய்க்க வேண்டும்....
*
அன்பே கடவுள்!
அன்பை தரும்
அன்னை மட்டுமே கடவுள்!
தாயே!நீ வாழ்க!
அன்பிற்கு உயிர் கொடுத்தவளே!!!
பல்லாயிரகணக்காண்டுகள் நீ வாழ்க!
*

No comments:

Post a Comment