Tuesday, January 11, 2011

என்ன செய்யப் போகிறாய்? !....





மெளனத்தின் வியாபிப்பால்
கனவுகளற்ற எனது பிரபஞ்சம்
சலனமற்றுக் கிடந்தது

தூரத்தில் யாருடைய

வீட்டின் கதவோ
இழுத்துச் சாத்தும் சத்தமும்
கரையும் காக்கையின் சத்தமும்
என்னை....
அரைத் தூக்கத்தில் கிடத்தியது

கூரை வழியே

கசிந்தொழுகும் சூரியன்
தலையணையோரம் தகித்துக்
கன்னங்களைச் சுட்டுக் கொண்டிருந்தது

உச்சி வெயிலின் உஷ்ணம்

பிடரிகளில் வியர்வையாகத் துளிர்த்து
ஊறும் உணர்வாக
வழிந்தோடியதால் - குத்த வைத்து
உட்கார்ந்து கொண்டேன்

எதிர்காலம் சூன்யமாக

ஓர் ஒற்றைக்கேள்வி கேட்டது
என்ன செய்யப் போகிறாய்?.....

No comments:

Post a Comment