ஜப்பானின் ஜனனம்..!
கடல் கடந்து,
காற்றைக் கிழித்தும்
காணவரும் மக்கள்
நெஞ்சினைக்
கைத்தட்டவைத்த
ஜப்பானே..
உன் வளர்ச்சிக்கு
தலை வணங்குகிறேன்.....!
உன்னைப் பெற்றெடுத்து
பெயர் சூட்டிய தாய்
யார் என்பதைக் கூறு,
நானும் சோதனைக்குழாய்
மூலம் ஒரு சாதனை
இந்தியாவை
உருவாக்க விழைகிறேன்....
இரண்டாம் உலகப்போர்
உன் சாதனைக்கு
வித்திட்ட சோதனை
விதை என்பேன்.......
அன்று ,
அமெரிக்கர்கள் போட்ட
அணுகுண்டால் உன் நாடு
சிதைவுண்டது.......
அக்குண்டு ,
ஆக்சிஜனைக்கூட
உன் நாட்டிற்குள்
அனுமதிக்க மறுத்ததாம் ,
ஆப்ரிக்கரை, அமெரிக்கர்கள்
வாட்டியதைப்போல .......
புல்பூண்டு கூட
புதிதாய்த் தோன்ற
அஞ்சியது...
பிறந்தவுடன்
இறந்துவிடுவோமோ
என்ற பயத்தில்......
ஆயரம் சன்னல்கள்
திறந்திருந்தும்
அலுப்பின்றி
அடிக்கும்
வெப்பக்காற்றால்,
உன் நாட்டின்
இயற்கை எழிலுடன்
உன் நாட்டினர்
மூக்குமா தேய்ந்து
போனது???
உன் உடல் வாகு குன்றினும்,
உள்ள வாகு குன்றாமல்
நிலைநாட்டுகின்றது,
உன் புகழை......
அகிலமே அண்ணார்ந்து
பார்க்கும் அதிசயங்களை
அளிக்கிறாய் ....
உன் நாட்டின் மைந்தர்கள்
அனைவரும் கண்டுபிடிப்பின்
கலையாத கருவூலங்கள்.....
உன் நாட்டின் ஓரத்தில்
முளையாத நாற்று
உன் மனதின்
வீரத்தில் முளைந்து
நிற்கிறது......
விரைவில் விவசாயத்தை
துவங்கு...
இந்த அகிலமே
காத்திருக்கின்றது....
உன் திறமையை
அறுவடை செய்ய .........!!!
No comments:
Post a Comment